-நஜீப்-
கடந்த நான்காம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும் கட்சி தாவல்கள் என்று பரவலாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தது கொண்டிருந்தன. ஆனால் அன்று அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று, நாம் இதே பக்கத்தில் சொல்லி இருந்தோம். தனது கட்சியில் இருந்து பலர் தாவுவார்கள் என்று சஜித்தும் மிகுந்த அச்சத்தில்தான் இருந்தார் என்பதும் உண்மை.
இதனால் அவர்களை சமாளிக்க அவர் திடீரென கொழும்பில் தனது கூட்டணியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு இராப்போசன விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்கு அழைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வருகை தந்திருக்கவில்லை.
இது தலைவர் மீது அவர்களுக்கு இருக்கின்ற அதிர்ப்த்தியின் வெளிப்பாடு என்பதை அந்தக் கட்சியில் உள்ளவர்களே தமக்குள் பேசிக் கொள்கின்றார்கள். மீண்டும் தனித்துவம் பேசும் சிறுபான்மைக் கட்சியினரும் இப்போது மதில் மேல் ஏறிவிட்டதாக ஒரு செய்தி.
ரணில் ஆட்சி தொடரலாம் என்ற எதிர்பாப்பு அது. இவர்களில் பலர் ரணிலை இரசியமாகச் சந்திது பேசி இருக்கின்றார்கள். ஆனால் உடனடியாக அமைச்சுக்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று ரணில் முகத்திற்கே சொல்லியும் இருக்கின்றார்.
நன்றி: 09.04.2023 ஞாயிறு தினக்குரல்