-நஜீப்-
பிரதமர் ரணில் தனது நிதி அமைச்சுப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தம்மிக்கப் பெரோரா பகிரங்கமாக பேசி இருந்தார். நிதி அமைச்சராக ரணில் எந்தக் காரியத்தையும் பார்க்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
அடுத்து, கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது ஜேவிபி தலைவரை சீண்டப் போய் ரணில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அணுர: உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், என்பது உங்களுக்கும் தெரியும்.
இந்த நாட்டில் பிரதமர் பதவி பார்க்க உங்களுக்கு எந்த அருகதையுமில்லை. நீங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதன். உங்களுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளோ கஷ்ட தூன்பங்களோ தெரியாது.
நீங்கள் பூமியில் வாழ்கின்ற ஒரு மனிதன் அல்ல, அதனால் மக்களின் உணர்வுகளை நீங்கள் அறிய மாட்டீர்கள். இலங்கை அரசியலில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு சதிகாரனாகவே நீங்கள் வேலை பார்த்து வந்திருக்கின்றீர்கள்.
இன்றும் அதனைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனக்குப் பிரதமர் பதவி, நோபல் விருது என்பன தருவதகச் சொல்ல நீங்கள் யார்? உங்கள் பதவியே ஆடிக் கொண்டிருக்கின்றது. உங்களை இந்த நாட்டில் எவராவது மதிக்கின்றார்களா? எனவும் கேட்டார் அவர்.
அணுர சகா.விஜித ஹேரத் மிஸ்டர் பீன் பாத்திரத்தில்தான் நீங்கள் காரியம் பார்க்கின்றீர்கள். பிரதமர் பதவிக்கு அது அழகல்ல என்றும் ரணிலைப் போட்டுச் சாத்தினார்.
நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல்