-யூசுப் என் யூனுஸ்-
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததற்காக கண்டனம் தெரிவித்து ஈராக்-பக்தாத்திலுள்ள சுவீடன் தூதுவராலயத்தை ஆர்ப்பாட்டிக்கார்கள் தீயிட்டுக் 20ம் திகதி கொளுத்தி இருக்கின்றார்கள். கடந்த வியாழன் இந்த சம்பவம் நடந்திருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஈராக்கிலுள்ள ZIYA மத குரு முக்தாடா ஆதரவாலர்கள் ஏற்பாடு செய்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்த விவகாரத்துக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணை கொண்டுவரபபட்ட போது இந்தியா குர்ஆனை எதிர்த்தவர்களுக்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டி பாகிஸ்தான் அங்கு கொண்டு வந்த பிரேரணைக்கு வாக்களித்து தனது ஆதரவை அங்கு வெளியிட்டிருந்தது.
அதே நேரம் சில முஸ்லிம்கள் அங்கு பைபிலை எரிக்கவும் யூதர்களின் வேத நூலை எரிக்கவும் சுவீடன் அரசிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அரசு அனுமதியை வழங்கி இருந்தது. ஆனாலும் அனுமதி கோரியவர்கள் அப்படி அந்த வேத நூல்களை எரிக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளத்தான் அவர்கள் இந்த அனுமதியை கோட்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்