–நஜீப்–
தான் பதவிக்கு வந்த பின்னர் ஒருசதம் கூட கடன் வாங்கவில்லை என்று நமது ஜனாதிபதி பகிரங்கமாக அறித்திருந்தார். இது தற்போது கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது.
சமூக ஊடகங்கள் அந்தக் கடன் கணக்குகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன. இது பற்றி நமக்குக் கிடைத்த தகவல்களை இப்போது பார்ப்போம்.
இந்திய தந்த 200 கோடிக்கு அமெரிக்க டலர் கடனில் மின்சார அபிவிருத்தி வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது என்றார் ஜனாதிபதி.
பங்களதேஷ் 200 கோடி டொலர் கடன் தந்து திருப்பிச் செலுத்த வேண்டிய காலத்தையும் நீடிப்புச் செய்திருக்கின்றதே அது எப்படி.?
ந்த ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த பின்னர் 2019 நவம்பர் 16 முதல் 2021 செப்தெம்பர் வரை 1411 கோடி அமெரிக்க டொலர்கள் (352750 கோடி ரூபாய்) கடன் பெறப்பட்டிருக்கின்றது.
இந்த தகவலை வெளிநாட்டு வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் சம்பத் மந்திரி நாயக்க கையொப்பத்துடன் உறுதி செய்திருக்கின்றாராம்.
அதில் ஒரு சதம் கூட திருப்பி செலுத்த வில்லையாம்! நமக்கு இந்தத் தகவலை சொல்பவர் பிரபல அரிசியல் விமர்சகர் பாரத தென்னகோன்.