மொட்டுக் கட்சியில் இன்னும் பலருக்கு அமைச்சு 

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல மூத்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய,

பவித்ரா வன்னியாராச்சி,

எஸ்.எம். சந்திரசேன,

எஸ்.பி. திஸாநாயக்க,

சி.பி. ரத்நாயக்க,

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

ரோஹித அபேகுணவர்தன

மஹிந்தானந்த

நாமல் ராஜபக்ஷ

ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வஜிர

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக கொழும்பு அரசியல் பரபரப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிரணியில் இருக்கின்ற இன்னும் பலரும் அமைச்சுப் பதவிகளுக்காகத் தூது அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். மலையகதத்திலும் கடும் போட்டி நிலை. என்றும் தெரிகின்றது.

Previous Story

கலைந்த கனவுகள் சிதைந்த திட்டங்கள்

Next Story

வேட்டையும் சிவில் யுத்தமும்!