முதுகில் குத்தி விட்டார்கள்!

-நஜீப்-

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தமது தரப்புக்கு வெற்றி. தானே அடுத்த பிரதமர் என்று சஜித் கணக்குப் பார்த்திருந்தார். அந்த எதிர்பார்ப்பில்தான் அவர் அடுத்தவர்களுடன் பேசியும் வந்தார்.

நான் பிரதமராகும் போது மிகச்சிறிய ஒரு அமைச்சரவையைத்தான் வைத்திருப்போன். டலஸ் ஆட்களுக்கும் அதில் இடம் கொடுக்க வேண்டும் என்று தனது தரப்பிலுள்ளவர்களிடம் பேசியும் இருக்கின்றார்.

தேர்தல் முடிவுகளில் தனது அணியில் நான்கில் ஒருவர் ரணிலுக்கு வாக்குப் போட்டிருக்கின்றார்கள் என்று இப்போது உறுதியாகி இருக்கின்றது.

தனது பக்கத்தில் அமர்ந்து கொண்டு திட்டங்கை வகுத்த சிறுபான்மைக் கட்சி தலைவர்கள் கூட அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

டீல்காரர்கள் அணிகள் வழக்கம் போல் இந்தத் தேர்தலிலும் தமது விளையாட்டைக் காட்டி முதுகில் குத்தி இருக்கின்றார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

அவர்கள் பணத்துக்காக எதுவும் செய்யக் கூடியவர்கள் என்று நாம் கடந்த வாரம் பல இடங்களில் சுட்டடிக் காட்டி இருந்தோம் என்பது தெரிந்ததோ.

நன்றி:24.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

‘சூரரைப் போற்று’

Next Story

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு 25ல்! பதவியேற்பு.