மீண்டும்  13ஆம் திகதி சுனாமி  மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை

ஆட்சியாளர்கள் உடனடியாக வெளியேற விட்டால், 9 ஆம் திகதி புயல் வந்தது, 13ஆம் திகதி சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக வருகைத் தந்த போதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட உலப்பனே சுமங்கல தேரர், மக்களை நிராகரித்த தலைவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இப்போது நிலைமை மாறி வருகிறது.

 

Previous Story

நாட்டிலிருந்து தப்ப ஓடித்திரியும் கோட்டா!

Next Story

கடல் வழியாகத் தப்பி ஓட ஏற்பாடு