மீண்டும் புலி வந்த கதை!

-நஜீப்-

புலிகள் மக்களை வெட்டுகின்றார்கள் என்று கத்திக் கொண்டு அங்கும் இங்கும் பலர் ஓடி இருக்கின்றார்கள். அம்பாறை-நவகிரியாவ வனபாதுகாப்பு அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் அம்பாறை-பக்கிஎல பொலிசுக்குத் தகவல் கொடுக்க, காட்டுப் பிரதேசத்தில் பதுங்கி இருந்த அந்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்கள் வந்த முச்சக்கர வண்டி, மேட்டார் சைக்கில்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மே18ம் திகதி புலித் தாக்குதல் தொடர்பாக த ஹிந்துப் பத்திரிகை செய்திக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா என்று ஆரயப்பட வேண்டும். கொழும்பு அரசியல் குழப்பத்தை திசை திருப்புகின்ற ஒரு ஏற்பாடாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.

இதற்கு முன்னர் நீர் கொழும்பில் முஸ்மிம்கள் சிங்களவர்களையும் கிருஷ்தவர்களையும் தாக்குகின்றார்கள் என்று ஒரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இது கூட போலியான கதை. அதனை சிங்கள கிருஷ்தவ சமூகத்தினரே உறுதி செய்கின்றார்கள். இதன் பின்னணியில் கூட ஆளும் தரப்புக் குண்டர்களதான்; இருந்தார்கள் என்று தெரிகின்றது.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 22.05.22

Previous Story

மொயின் அலியின் வறுமை!

Next Story

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆப்பு?