–நஜீப்–
ரணில் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் அவருக்கு எவரும் தொந்தரவுகள் செய்யக் கூடாது. ஒரு பத்து வருடத்திற்கு அவரை அதிகாரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தார் வஜிர. அத்தோடு இன்று உலகில் இருக்கும் மிகவும் சிறந்ததும் செல்வாக்கானதும் தலைவர் ரணில் எனவும் வேறு சான்றிதழ் கொடுத்திருந்தார்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய விஷேட மா நாட்டில் வருகின்ற தேர்தலில் ரணில் 100 நூறு இலட்சம் வாக்குகள் பெறுவார் என்றும் வஜிர தெரிவித்திருந்தார். ரணில் தேர்தலில் முப்பது (30) இலட்சத்தில் இருந்துதான் வாக்கு எண்ணிக்கையைத் துவங்குவார்.!
இது ரவி கருணாநாயக்க கணக்கு.! காக்கா பிடிப்போருக்கு கணக்கில் ஏன் இந்தக் குழப்பமோ தெரியாது.? அவை எப்படிப் போனாலும் வஜிர அபோவர்த்ன ஜனாதிபத் தேர்தல் தொடர்பாக புதிதாக சொல்லி இருக்கின்ற இந்தச் செய்தி தொடர்பில் மக்கள் என்னதான் நினைக்கின்றார்கள் என்பதனை அவர்களே முடிவெடுத்தக் கொள்ளட்டும்.!
கதை இதுதான்.! வரும் தேர்தலில் எவரும் ரணிலை எதிர்த்து தேர்தலுக்கு வரக்கூடாது. அவரைத் தனிக் குதிரையாக களமிறக்க வேண்டும். அப்போது தேர்தல் செலவுகள் குறையும். அதனால் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் இது வஜிர நாட்டுக்கு சொல்லும் புதிய யோசனை! கடவுளே யாருக்குப் பைத்தியம்.?
நன்றி: 29.10.2023 ஞாயிறு தினக்குரல்