-நஜீப்
(நன்றி: 29.09.2024 ஞாயிறு தினக்குரல்)
தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட பெறுபேருகளை நாம் முன்பு குறிப்பிட்டிருந்தது போல ஒரு சாதாரண சித்தி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொது வேட்பாளர் தொடர்பில் முன்பிருந்தே சுமந்திரனும் சாணக்கியனும் கோடாரிக்காம்பு வேலைகளைத்தான் பார்த்துக் கொண்டு வந்தனர்.
ஆனால் மாவை சேனாதிராஜ பார்த்த வேலை வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவில் கேவலமாக இருந்தது என்பதுதான் எமது கணக்கு. தமிழரசுக் கட்சி தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் சிரிதரன் கூட கடைசி சில மணி நேரத்தில் தனது ஆதரவு என்று சொல்லிக் கொண்டாலும் அவர் பெரிதாக பொது வேட்பளருக்காக எந்த ஒரு பரப்புரை நடவடிக்கைகளையும் உறுப்படியாகச் செய்வில்லை.
இது அவரது ஆளுமையின் குறைபாடோ என்னவோ தெரியாது. அத்துடன் இந்த முறை தமிழ் மக்கள் வாக்கு வழங்கி இருக்கின்ற ஒழுங்கை அவதானிக்கும் போது அவர்கள் தெற்குடன் பணிந்து போகும் ஒரு மனநிலைக்கு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.