புரட்சி சாக மாட்டாது!

-நஜீப்-

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற போராட்டக்காரர்களை வேட்டையாடுவது தொடர்பான கலந்துறையாடலில் எதிரணித் தலைவர் சஜித் ஜேவிபி ஹதுன்ஹெத்தி  முன்னிலை சோசலிஸக் கட்சி புபுது ஜாகொட மற்றும் பல அரசியல் சிவில் அமைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்த கொண்டனர்.

கூட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமிலில் வெளியே வந்திருந்த பாதிரியார் ஜீவந்தப் பீரிஸ் பேசும் போது புரட்சிகாரர்களைக் ஆளும் வர்க்கத்தினருக்குக் கொலை பண்ணிவிட முடியும். அப்படி பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகாரர்கள் நம் நாட்டிலும் உலகிலும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் புரட்சியை ஒரு போதும் கொல்ல முடியாது. அது உலகம் இருக்கும் வரை வாழும். அதுதான் இந்த நாட்டிலும் நடந்து கொண்டிருக்கின்றது. அடக்கமுறைக்கு எதிராக மக்கள் நலனுக்காகப் போராடியவர்களை அரசு இன்று வேட்டையடி வருகின்றது.

அதே நேரம் பொது மக்கள் சொத்துக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து நாட்டை நாசமாக்கியவர்கள்தான் மீண்டும் நாட்டில் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார்கள்.

இதனை அவர்கள் வெற்றி என்று நினைக்கலாம். ஆனால் இறுதி வெற்றி புரட்சியாளர்களுக்குத்தான் என்பதனை இவர்கள் விரைவில் புரிந்து கொள்வர்கள் என்று குறிப்பிட்டார் பாதிரியார்.

நன்றி: 28.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாகிஸ்தானில் வரலாற்றில் இல்லாத அளவு மழை-937 பேர் உயிரிழப்பால் அவசரநிலை பிரகடனம்

Next Story

இறந்த குழந்தை மூச்சுவிடத் துவங்கியதால் அதிர்ச்சி: பிரித்தானியாவில் பெரும் சர்ச்சை