புதிர் கூட்டணிகள் வரும்!

-நஜீப்-

தேர்தலில் எண்ணிக்கைகளுக்குத் தான் முதலிடம். வட்டாரத்தில் அதிகம் பெருபவர் வெற்றி. இன்னும் சிலர் கட்சி பெரும் வாக்கு எண்ணிக்கையில் முடிவாகம் நிலை. கட்சிகள் கூட்டணிகளுக்கு என்று பங்கு கொடுக்க வேண்டி இருக்கும்.

ஆனால் நாம் அந்தக் கூட்டல் கழித்தல் தொடர்பாக இங்கு பேசவரவில்லை. தேர்தல் என்று வந்தால் கூட்டணிகள் வரும் அதனைத்தான் இங்கு கூட்டல் என்றும் அதே போன்று சிலரை வெளியே தள்ளிவிடுவார்கள். அதுதான் இங்கு கழித்தல் என்பது எமது கணக்கு-கதை.

சில வாரங்களுக்கு முன்னர் மொட்டுக் கட்சியும் ஐதேக.வும் மெகா கூட்டணி என்று சொன்னர்கள். ஆனால் இப்போது மொட்டு அணியில் யானைக்கு இடமில்லை என்று கதை. சந்திரிகா-சஜித் மற்றும் தனித்துவத்தார்கள் ஓரணில் என்றும் பேச்சு.

ஜேவிபி. சிவில் அமைப்புக்களுடன் பலமான கூட்டாம்.! மைத்திரி, டலஸ், விமல், வாசு, உதய, திஸ்ஸ சில்லறையாக ஓரணியாம்! கூட்டணிகள் சமைகின்ற போது சீட்டுக் கிடைக்காமல் போவோர் யார் யார் முகாம்களுக்குள் நுழைவார்கள் என்பது அவர்களுக்கே இன்றுவரை புதிராக இருக்கின்றது.

நன்றி: 08.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உள்ளாட்சித் தேர்தல்: கண்டியில்  SLMC?

Next Story

ஐஸ்:முஸ்லிம் கிரா­மங்கள்!  திடுக்­கிடும் தக­வல்கள்