நமது நாட்டில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவதும் பதவியிலிருந்து துறத்தப்படுவதும் அன்றாட நிகழ்வுகள் போல நடந்து கொண்டிருக்கின்றது. இந்த அமைச்சரவையும் எத்தனை நாட்களுக்குத்தான் கதிரையில் இருக்கப் போகின்றதோ தெரியாது.புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி,
1.நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்
2.சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சர்
3.விஜயதாச ராஜபக்ஷ – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
4.ஹரீன் பெர்னாண்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை
5.அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்
6.ரமேஸ் பத்திரண – கைத்தொழில் அமைச்சர்
7.மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
8.நளின் ருவான் ஜீவ பெர்னான்டோ – வர்த்தகம், உணவு, பாதுகாப்பு அமைச்சர்
9.டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்
………………………………………………….
அதேவேளை முன்னதாக நான்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பரமானம் செய்துகொண்டிருந்தனர்.
10.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக அமைச்சர்,
11.பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்
12.பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி
13.அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவிபிரமாணம் செய்துகொண்டனர்.