பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை ஏமாற்றிய நபர் தலைமறைவு

தனது அலுவலகத்திற்கு முதல்தடவை விஜயம் மேற்கொண்ட வேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அமைச்சின் அலுவலகத்திற்குள் முதல்தடவை நுழைந்ததும், நபர் ஒருவர் என்னை அமைச்சின் பல பிரிவுகளிற்கு அழைத்து சென்று காண்பித்தார்.

சந்தேக நபர்

நான் அவர் அமைச்சை சேர்ந்தவராக இருப்பார் என நினைத்தேன். நான் அவர் அமைச்சின் பணியாளர் என நினைத்தேன். ஆனால் அவர் தன்னை ஜனாதிபதி செயலகம் பிரதியமைச்சரின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவதற்காக அனுப்பியதாக அமைச்சரவை பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை ஏமாற்றிய நபர் தலைமறைவு | Sunil Wattagala Accused A Person Stole

அன்றைய தினம் தேநீர் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, அந்த நபர் அதனை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக செயற்பட்டார். என்னை அவர் அமைச்சின் பல பகுதிகளிற்கும் அழைத்து சென்றார்.

கடவுச்சீட்டை தயாரிக்கும் பகுதிக்கு என்னை அழைத்துச்சென்ற நபர் இதுவரை எந்த அமைச்சரும் அங்கு வரவில்லை என குறிப்பிட்டார். மறுநாள் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது, எனது அலுவலக பணியாளர்கள் என்னை பாராட்டி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என இந்த நபர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை ஏமாற்றிய நபர் தலைமறைவு | Sunil Wattagala Accused A Person Stole

அவர் எனது அலுவலக பணியாளராக பணியாற்றுவதற்கு பொருத்தமற்றவர் என எனக்கு தெரிவித்திருந்தனர். விசாரணைகளின் போது அந்த நபர் எனது அமைச்சுடன் தொடர்பில்லாதவர் என்பது தெரிய வந்துள்ளது.

அதேவேளை, குறித்த நபர் 17 கடவுச்சீட்டுகளுடன் அமைச்சின் அலுவலகத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்துள்ளது, அமைச்சர் கடவுச்சீட்டுகளை பெறச்சொன்னார் என தெரிவித்தே அவர் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளார். அந்த நபர் நிசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

திருகோணமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம்

Next Story

மன்மோகன் சிங்