பிரதமர் பதவி விலகியது பற்றி சர்வதேச ஊடகங்களும் நாமும் கூட சற்று நேரத்துக்கு முன்னர் செய்தி சொல்லி இருந்தோம்-அந்த செய்தியை பிரதமர் அலுவலகம் தற்போது மறுக்கின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில்,அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில்,இந்த மறுப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.