பிரதமர் மஹிந்த சீற்றம்!

-நஜீப்-

இப்படியொரு நிலை தனக்கு வரும் என்று மஹிந்த  ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.  அவருடன் இருந்தவர்கள் பிழையான தகவல்களைக் கொடுத்து படுகுழியில் ஆளைத் தள்ளிவிட்டார்கள்.

உளவுத்துறையும் அவருக்கு யதார்த்தத்தை சொல்லத் தவறிவிட்டது. ஒரு கட்டத்தில் மஹிந்த பதவியை விட்டு ஒதுங்க இருந்தார்.

சிரந்தி பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக அதனை தடுத்திருந்தார். மக்கள் போராட்த்தை அடித்து நெருக்கிவிட்டால் அடிபணிந்து விடுவார்கள் என்று படிப்பறிவில்லாத ஒரு கூட்டம் சொன்ன கதை கேட்டு இன்று மனிதன் சாதம், கடாபி போல் சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் பதுங்கித் திரியும் நிலை.

சட்டம் ஆளைத் தேடுகின்றது. தம்பியும் ரணிலும் தன்னை காப்பார்கள் என்ற நம்பிக்கையும் ஏமாற்றத்தில்தான் முடியும் போல் தெரிகின்றது. இக்கட்டன நிலை வந்தபோது பித்துப் பிடித்தவன் போல அடுத்தவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு மஹிந்த அலரி மாளிகையில் கதறி, மனைவியையும் திட்டி இருக்கின்றார்.

சிரந்தி மஹிந்த கால்களைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டதாகவும் ஒரு தகவல். கடவுளே கதை உண்மையா?

நன்றி: 25.05.202 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உலகுக்குப் புதுப் பாதை!

Next Story

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை:   நிலமை மேலும் மோசமாகும்! மின்வெட்டு 15 மணித்தியாலம்!