–நஜீப்–
காலிமுகத்திடல் போராட்டகாரர்களை கைக்குழந்தைகள் என்று கொச்சையாக பிரதமர் எம்.ஆர். சில தினங்களுக்கு முன்னர் அடயாலப்படுத்தி இருந்தார். ஆனால் ஆச்சர்யம் அந்தக் கைக்குழந்தைகளுடன் பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என்று இப்போது அவரே நேரடியாக அழைப்பும் விடுத்திருக்கின்றார்கள்.
ஆனால் அவர் சொன்ன கைக் குழந்தைகள் இப்போது உம்முடன் எமக்கு என்ன பேச்சு எனக் கடுமையான தொனியில் எம்.ஆருக்குப் பதில் கொடுத்திருக்கின்றார்கள். அரசியல் ரீதியில் பிரதமர் விடுத்த அழைப்பு சர்வதேச அளவில் போராட்டகாரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கிகாரமாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.
ஆனால் குழந்தைகள் பேச்சுவார்த்தைக்கே இடம் கிடையாது எங்களுடைய கோரிக்கையை முதலில் நிறைவேற்றுங்கள் அதன் பின்னர் பேச்சு வார்த்தைகள் பற்றி பார்க்கலாம் என்று பதில் கொடுத்திருக்கின்றார்கள் கோ ஹோம் கோட்ட ஊர்க்காரர்கள்.!
நன்றி 17.04.2022 ஞாயிறு தினக்குரல்