-நஜீப்-
இலங்கை அரசியல் வரலாற்றி மிகப்பெரிய கொள்ளைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்ற நல்லாட்சிக் காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பாக அனைவரும் அறிந்திருந்தாலும் அந்தப் பணம் எங்கே போனது எதற்காக செலவு செய்யப்பட்டது என்பது எவருக்கும் தெரியாது.
அது பற்றி தகவலை நமக்குத் தந்திருக்கின்றார் சஜித் அணியின் மதுகம அலுத்கம ஆகிய இரு தொகுதிகளுக்கான அமைப்பாளரும் பிரபல கோடிஸ்வரருமான பின்னவல ஜகத் விதான என்பவர். இந்தப் பணம் சிரிகொத்த மேல் மாடி அறைகளில் அன்று குவித்து வைக்கப்பட்டிருந்தது.
அதில் தேர்தல் செலவுக்களுக்காக பணம் அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. இன்று நமது அணியில் இருப்பவர்களும் அங்கு சென்று அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். தான் பணம் வாங்க அங்கு போகவில்லை.
ஆனால் அந்தப் பணத்தில் 45 இலட்சம் ரூபாய்களை சதாசிவம் என்ற ஐதேக. முக்கியஸ்தர் எனது வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தார். என்று ஜகத் ஆதாரத்துடன் அடித்துக் கூறுகின்றார். பிணைமுறியில் தவறுகளே நடக்கவில்லை என்று புத்தகம் எழுதிய சுஜியும் இன்று சஜித் அணியல் முக்கிய பதவியில்.!
நன்றி: 05.03.2023 ஞாயிறு தினக்குரல்