-நஜீப்-
இன்று பரபரப்பான இரகசிய தகவல்களை நாட்டுக்குச் சொல்லும் புலனாய்வுத்துறை ஊடகவியலாளர் முன்னாள் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க.
அவர் தற்போது சிறையில் இருக்கின்ற திலினி பிரியமாலி என்பவர் பற்றி நெருப்பான செய்தி ஒன்றை ஊடக பேட்டியில் சொல்லி இருக்கின்றார். இந்த 1400 கோடி கொள்ளைக்காரியின் தந்தை முன்னாள் ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்ஹ என்று அவர் உறுதிபட சொல்லி இருக்கின்றார்.
இதே சோமவன்சவை நாமும் நேரடியாக சந்தித்த போது நெருக்கடியான 1988-1989களில் தான் கண்டியில் தலைமறைவாக இருந்த இடத்தை நமக்கே முதல் முறையாகச் சொல்லி இருந்தார். அதனை நாம் அந்த நாட்களில் இதே பத்திரிகையில் சொல்லி இருந்தோம்.
தற்போது திலினியின் தாய் இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. தற்போதய திலினியின் தாயின் இரண்டாவது கணவர் திலினியை ஜேவிபிக்காரனின் மகள் என்று அடிக்கடி திட்டியும் வந்திருக்கின்றார்.
தனது கதையின் உண்மைத் தன்மையை ரிஎன்ஏ பரிசோதனையில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் சவால் விடுக்கின்றார் கீர்த்தி! அத்துடன் ராஜபக்ஸாக்களுக்கும் திலினிக்கும் நெருக்க உறவு என்றும் அவர் கூறுகின்றார். திலினியை தந்தை சோமவன்ச இரு முறை கொலை செய்யவும் முயன்றார் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
நன்றி:27.11.2022 ஞாயிறு தினக்குரல்