-நஜீப்-
நமது நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் இருப்பதை சம்பளப் பட்டியலில் கையொப்பமிடுகின்ற போது தான் உறுதி செய்ய முடிகின்றது. இன்றும் பலர் சண்டித்தனம் மற்றும் கடத்தல் போன்றவற்றைச் செய்கின்றபோது அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
ஆனால் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றி ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர் அணுரகுமாரவின் ஆளுமை பேச்சாற்றல் காரணமாக அவரை எதிர்த்து நூற்றுக் கணக்கானவர்கள் ஒரே சமயத்தில் எழுந்து நின்று கூக்குரலிட்டாலும் அவரை அவர்களால் வீழ்த்த முடியாது.
நம்முடன் அவர் ஆளுமை பற்றி சிலாகித்துப் பேசிய ஒரு மொட்டுக் கட்சி நாடாளுமன்று உறுப்பினர் அவர் நூறுபேருக்கு சமன் என்று குறிப்பிட்டார். இந்தக் குறிப்பை நாம் பத்திரிகையில் ஒரு குறிப்பாகச் சொல்லும் போது உங்களுடைய நாமத்தையும் சுட்டிக் காட்ட முடியுமா என்று நாம் அவரிடம் சம்மதம் கோட்ட போது.
ஐயோ கடவுளே அப்படிச் செய்து என்னை ஆபத்தில் மட்டும் மட்டிவிடாதீர்கள் என்று நம்மை அவர் வேண்டிக் கொண்டார். அந்த மொட்டு நாடாளுமன்று உறுப்பினர்.
நன்றி: 28.01.2024 ஞாயிறு தினக்குரல்