நீரும் நெருப்பும் மிகவும் பலம் வாய்ந்த இரு சக்திகள். அது போல்தான் முஸ்லிம் சமூகத்தில் இந்தத் தேர்தலில் மனித நேயம் கொண்ட லாபீர் ஹாஜியாரின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் அவர் சிலருக்கு நீராகவும் இன்னும் சிலருக்கு நெருப்பாகவும் தெரிகின்றார்.
இது வரை மாபெரும் தலைவர்கள் போல் இருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்தத் தேர்தலில் நாம் வழக்கம் போல் மக்களை ஏமாற்றி வெற்றி பெற முடியாது என்பதனைத் தெரிந்து கொண்டு இந்த முறை மக்களைச் சந்திக்க வீடு வீடாக ஏறி இறங்குகின்ற காட்சிகள் இப்போது கண்டியில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் லாபீர் ஹாஜியாரால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து என்று மேடைகள் தோரும் ஒப்பாறி வைத்துக் கொண்டு வருகின்றார்கள். லாபீர் ஹாஜியார் வருகை கண்டி முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய பலம் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.