-நஜீப்-
ஒரு குற்றச் செயல் நடந்து அதற்கு பொலிஸ் நீதி மன்றத்துக்கு வழக்குத் தாக்கல் செய்வதும், அதன் பின்னர் ஆமை வேகத்தில் வழக்கு நகரும். சம்பந்தப்பட்ட வழக்குத் தீர்ப்பு வரும் முன்னேரே அதில் சம்பந்தப்பட்ட பலர் இறந்தும் விடுகின்றார்கள்.
சில குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் வழக்கை தாமதப்படுத்துவதும் குற்றவாளிகளை காப்பற்றுவது-கண்டு கொள்ளாமல் விடுவதும் இங்கு பரவலாக நடக்கின்றது. சில வழக்குகளை அதிகார வர்க்கத்தின் தேவைக்காக தவறாக தீர்ப்புக்கள் வழங்கப்படுவதும் கூட நாட்டில் நடந்திருக்கின்றன.
ராஜபக்ஸாக்களுக்கு நெருக்கமாக இருந்து அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்தான் கொழும்பு-கடுநாயக்க அதிவேகப் பாதையில் கொல்லப்பட்ட சனத் நிசந்த. இது அவருக்கு கடவுள் கொடுத்த தீர்ப்பு என்று மக்கள் மத்தியில் கடவுளுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்படிக் கொல்லப்பட்ட ஒருவருக்காக இந்தளவுக்கு நாட்டில் மக்கள் ஒரு போதும் மகிழ்ச்சி வெளியிட்ட சந்தர்ப்பம் இல்லை. பிரேமதாச கொல்லப்பட்ட போது அவரது அரசியல் எதிரிகள் ஒரு சில இடங்களில் பட்டாசு கொளுத்தினாலும் பல்லாயிரம் பேர் அவருக்காக கண்ணீர் வடித்தார்கள்.
நன்றி: 28.01.2024 ஞாயிறு தினக்குரல்