நாளையதினமும் எரிவாயு விநியோகம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 24, 25, 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளிலும் எரிவாயு இருக்காது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எரிவாயு விநியோகிக்கப்படும் என்று வெளியான வதந்திகள் காரணமாக பொதுமக்கள் இன்றும் வரிசையில் காத்திருந்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.