-நஜீப்-
நமது அரசின் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது. விரும்பியவர்கள் உள்ளேயும் வரலாம் அதே போன்று வெளியேயும் போகலாம். இந்த முறை இப்படிப் பேசி இருப்பவர் நிதி அமைச்சர் பீ.ஆர். இதற்கு முன்னர் பிரதமர் எம்.ஆரும், ஜனாதிபதி ஜீ.ஆரும் இப்படிப் பேசி இருந்தது தெரிந்ததே.
ஆளும் தரப்பில் இருந்து கொண்டு தலைவலி கொடுப்பவர்களுக்குத்தான் இப்படி ஒரு எச்சரிக்கையைக் கூட்டாகக் கொடுத்திருக்கின்றார்கள். அரசுக்குள் இருந்து கொண்டு எம்மை விமர்சிப்பவர்கள் கரக்டர்களைப் பற்றி எமக்கு நன்றாகத் தெரியும்.
அவர்கள் உத்தமர்கள் அல்ல. என்ற வார்த்தையையும் அந்த எச்சரிக்கையில் கலந்திருந்தது. விமல், கம்மன்பில போன்றவர்களுக்கு அப்பட்டமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதும் அதனை வைத்து தற்போது பிளேக் மெயில் நடக்கின்றது என்று இதனை எடுத்துக் கொள்ள முடியும்.
நன்றி ஞாயிறு தினக்குரல் 16.01.2022