நாம் சொன்னபடி ஹக்கீம் மூக்கை உடைத்தார் ஹாபீஸ் நசீர்

நஜீப் பின் கபூர்-

ஹாபீஸ் நசீர் அமைச்சை ஏற்றதும் அவரை சமூகத்தின் அவமானச் சின்னம் என்று மு.கா.தலைவர் ஹக்கீம் சொல்லி இருந்தார். மேலும் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிக்கையும் விட்டார் ஹக்கீம்.

18.04.2022 திகதி எமது இணையத்தில் http://www.srilankaguardiannews.com மு.கா.தலைவர் ஹக்கீம் இது விடயத்தில் மூக்கை உடைத்துக் கொள்ளப் போகின்றார் என்றும் நாம் அடித்துச் சொல்லி இருந்தோம்.

இன்று 20.04.2022 அது நடந்திருக்கின்றது. இவர்களை ஆளும் தரப்புக்கு அனுப்பி வைத்தவரே தலைவர்தான் என்பது எமக்கு அப்போதிருந்தே தெரிந்திருந்தது.

இது பற்றி நாம் அவ்வப் போது தேசிய ஊடகங்களிலும் தொடர்ச்சியாக எழுதியும் வந்திருந்தோம். இன்று BBC க்கு வழங்கிய செய்தியில் ஹாபீஸ் நசீர் அதனை விவரமாக சொல்லியும் இருக்கின்றார்.

ஹக்கீம் தொடர்பில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த செய்திகள் நிறையவே நம்மிடமும் இருக்கின்றது நாம் எழுதிக் கொண்டிருக்கின்ற ‘இலங்கை அரசியலில் அந்தரங்கப் பக்கங்கள்’ என்ற நூலில் அவற்றை விவரமாக ஆதாரங்களுடன் சமூகத்துக்குச் சொல்லலாம் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆளும் தரப்புக்குத் தனது ஆட்களை அனுப்பி வைத்தது தலைவர்தான் என்று தெரிந்திருந்தும், இவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றேன் என்று  ஹக்கீம் சொல்லும் போதெல்லாம் அதற்கு கரகோஷம் செய்யவும் இன்னும் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதனைப் பார்க்கின்ற போது சமூகத்தின் அரசியல் முதிர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இவ்வாறான ஒரு நிகழ்வு சில வாரங்களுக்கு முன்னர் சம்மாந்துறையில் நடந்திருந்தது நமக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. எனவே புத்திஜீவிகள் இளைஞர்களையும் சமூகத்தையும் இன்னும் எவ்வளவுதூரம் அரசியல் ரீதியில் முஸ்லிம் சமூகத்தை அறிவூட்ட வேண்டி இருக்கின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

அது வரை இவர்கள் தமது அரசியல் வர்த்தகத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பார்கள் என்பது மட்டும் உறுதி. இதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

Previous Story

அமைச்சர் நசீர் அஹமதுக்கு எதிராக  SLMC போர்க் கொடி 

Next Story

ரம்புக்கனை விவகாரம் நீதவான் நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்!