-நஜீப்-
சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் பல விதமான கிசு கிசுக்கள். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போதய ஜனாதிபதி ரணிலுக்குக் தொலைபேசி எடுத்துக் கடுமையாக பேசியதாக மொட்டுக் கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் தரப்பில் கருத்துக் கேட்ட போது சத்தமாக சிரித்த ரணில், யாருக்கு யார் ஏசுவது, அவருடன் பேசிய நாள் கூட தனக்கு ஞாகமில்லை. இதிலிருந்து அமைச்சரவை மாற்றம் தொடர்ப்பில் அவர் ரணிலைத் தொடர்பு கொண்டார் என்பது அண்டப் புளுகு.
இது ஏமாளிகள் கண்டு பிடிப்பு. இப்படிச் சொல்லி அவர்கள் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நாடகத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ரணில் செயல்பாடுகளில் அதிர்ப்தியுற்றிருக்கும் மஹிந்தாவுக்கு நெருக்கமான சிலர் இது பற்றி வினாவியபோது நிறைவேற்று அதிகாரம் மிக்க பதவியை அவர் பாவிக்கத்தான் செய்வார். ஆளைப் பற்றித் என்ன தெரியாதா?
இவற்றை ஜீரணித்துக் கொள்ள முடியாவிட்டால் தேர்தலுக்குத்தான் போக வேண்டி வரும், என்று பெரியவர் கூறியபோது, ரணில் தொடர்பான நீண்ட முறைப்பாட்டுப் பட்டியலுடன் போனவர்கள் வாயடைத்து ஏமாற்றத்துடன் திருப்பி இருக்கின்றார்கள்.
நன்றி: 29.10.2023 ஞாயிறு தினக்குரல்