நஜீப்
நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல்
மீண்டும் நாட்டில் மரண தண்டனை அமுலாக்க வேண்டும் என்று பரவலான கோரிக்கைகள் இப்போது முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் நாவலப்பிடியாவில் ஒரு வைபவத்தில் சிறைச்சாலை அதிகாரியும் இதனை வலியுறுத்தி இருந்தார்.
நாட்டில் மரண தண்டனை என்பது சட்டத்தில் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி அதில் கையெழுத்து போடாத குறைதான் இங்கு. பல தசாப்தங்களாக தூக்குக் கைவிடப்பட்டிருக்கின்றது. காரணம் சர்வதேச அழுத்தம். ஆனால் போதை விவகாரத்தில் இதன் தேவை கட்டாயமாகியுள்ளது.

எனவே நாம் அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனையை முன்மொழிகின்றோம். மாகாணசபைத் தேர்தல் நடக்கின்ற அதே நேரத்தில் வாக்காளர் மத்தியில் இதற்காக ஒரு கருத்துக் கணிப்பையும் நடாத்தி நமது தேவையை அரசு மீண்டும் சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்தலாம்.
சிறிய ஒரு பணச் செலவில் இதணைச் செய்யமுடியும். ஒரு கல்லி இரு கானிகளைப் பறிப்பது போல ஒரு வேலைதான். பல நாடுகளில் போதைக்குத் தூக்குத்தண்டனை இருக்கின்றது.!





