-நஜீப்-
சிங்கள மக்களின் பெரும் தேசபக்த வீரராகக் கடந்த காலங்களில் வலம் வந்த மாகல் கந்தே தேரர் ஜப்பானில் ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டில் இலக்காகியது இன்று நாட்டில் வைரலான செய்தியாக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இவரும் ஞானசாரர் போலவே ஒரு அறிவுபூர்வமான ஆள் கிடையாது என்று நாம் கடந்த காலங்களில் சொல்லி வந்திருக்கின்றோம்.
போர் காலத்தில் ஊர்காவல் படையில் இணைந்து கொண்ட இவர், அந்த நாட்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசியைத் திருடியமையால் சேவையிலிருந்து விரட்டப்பட்டிருக்கின்றார். அதன் பின்னர் தனது 36 வயதில்தான் ஆள் தேரராகி இருக்கின்றார்.
இவர் முறைப்படி பௌத்த விடங்களைக் கற்றறிந்தவர் அல்ல என்றும் கூறப்படுகின்றது. கோட்டாபே ராஜபக்ஸாவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு பெரும் பங்களிப்புச் செய்தவர். இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு இன்று பல நாடுகளில் சட்ட அங்கிகாரம் கிடைத்திருந்தாலும் பௌத்த தர்மத்தில் ஒருபால் உறவுக்கே வேறும் உறவுகளுக்கோ இடமே கிடையாது. தேசபக்தர் இன்று பௌத்தத்துக்கே பெரும் அவமானமாகி நிற்கின்றார்.
நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்