துமிந்த சில்வா சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் !

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியும், அவரை மீண்டும் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 30்ம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ அறிக்கையைப் பொறுத்து தேசிய மருத்துவமனை அல்லது சிறைச்சாலை மருத்துவமனைக்கு துமிந்த சில்வா விரைவில் மாற்றப்படுவார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Previous Story

ஆசிய ஹாக்கி: தென் கொரியா சாம்பியன்

Next Story

தன்னை தானே திருமணம்:  குஜராத் பெண்!