-நஜீப்-
ரணிலின் டைடானிக் கதை சொன்ன நாம் இப்போது மற்றுமொரு கதையைச் சொல்லலாம் என்று நினைக்கின்றோம். வென்நீரை தனிய வைத்து அதாவது ஆர வைத்து குடிப்பது ஒன்றும் புதிய கதையல்ல.
ஆனால் தண்ணீரையே ஆரவைத்துக் குடிக்கின்ற ஒரு அரசியல்வாதி பற்றிய ஜனரஞ்சனமான கதை நாட்டில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பசுமையான ஒரு நாட்டில் பண மோசடி செய்தார் என்று ஆள் மீது குற்றச்சாட்டு வழக்கு வம்பு என்று வந்தபோது கோட்டா அரசில் அவருக்கு அதிலிருந்து விடுவிப்புக் கொடுக்கப்பட்டதால் மனிதன் தலை தப்பியது.
ஆனால் இனவாதம் கக்கும் அந்த அரசியல்வாதி இன்று மொட்டுக் கட்சியில் இருந்து விலகி நிற்க்கின்றார். அவர் பற்றிய ஒரு புதிய கதையைத்தான் நாம் இங்கு சொல்ல முனைகின்றோம்.
தற்போது பண மோசடியில் சிக்கி கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்ற திலினி பிரியமாலியிடம் இந்தத் தண்ணியும் பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்க்கின்றதாம்.
அப்படி பறிகொடுத்த தொகை 20 கோடியாம். இந்தக் கதையை வெளியில் சொல்லி இருப்பது முன்னாள் விமானப்படை அதிகாரியும் புலனாய்வுத்துறை ஆய்வாலருமான கீர்த்தி ரத்நாயக்க.
நன்றி– 06.11.2022 ஞாயிறு தினக்குரல்