திருமலை ஏழுமலையானை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தரிசித்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு நாட்கள் பயணமாக தன் குடும்பத்துடன் நேற்று முன் தினம் திருப்பதிக்கு வந்தார். அன்று இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை தன் குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து திரும்பிய, அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை, தீர்த்த பிரசாதம், ஏழுமலையான் திரு வுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.