திருநங்கையாக மாறிய மகனை கொலை செய்த தாய்!

-ஏ எம் சுதாகர்-

‘திருநங்கைகளை மனிதப் பிரவிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றது சமூகம். இது இந்தியாவில் பெரும் பிரச்சனை. இலங்கையிலும் இவர்கள் சிறு எண்ணிக்கையில் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் பகிரங்கமாக இனம் காட்டிக் கொள்வதில்லை. அவர்களை இங்கு குடும்பங்கள் வெளியில் காட்டிக் கொள்ளமல் வைத்திருக்கின்றன. இங்குள்ள பெரும்பாலான திருநங்கைகள் சொந்த வீடுகளிலே வாழ்கின்றார்கள். தமிழகத்தில்

திருநங்கையாக மாறிய

ஒருவருக்கு நடந்த கொடூரக் கதை இது. இவ்வாறன செய்திகளை நமது ஊடகங்கள் பேசுவதற்கு தங்குகின்றன.”

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து வசிக்கும் இவரது மகன் நவீன்குமார் .திடிரென இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார் அவரை மீட்ட உமாதேவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

நவீன் குமாரின் தாய் உமாதேவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது தான் அந்த பகீர் உண்மை வெளியானது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால்,தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை தாக்கியபோது நவீன் குமார் இறந்து விட்டதாக கருதி , அவரை தூக்கி வீசப்பட்டதாகும் பின்னர் ஏதும் தெரியாதது போல தானே மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்த போது நந்தகுமார் இறந்து போனது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.இதனை தொடர்ந்து தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் உட்பட ஆறு பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

நவீன் குமார்

மகன் திருநங்கையாக மாறியதால் அவமானம் தாங்க முடியாத தாய், தெரிந்த நபர்களை வைத்து மகனையே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சூரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சிவகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “வீட்டிலிருந்து தங்கள் மகன் காணாமல் போய்விட்டதாக கடந்த ஏழாவது மாதம் புகார் கொடுத்தார்கள் பின்னர் நாங்கள் பெங்களூர் சென்று நந்தகுமாரை மீட்டு வந்தோம் வரும்பொழுது நந்தகுமார் தன்னைப் பெண் போல அலங்காரம் செய்திருந்தார் .17 -07 2001 அன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம் அங்கு நந்தகுமார் நான் மேஜர் என் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறியதால் அனுப்பி விட்டார்கள்.”

காவல் ஆய்வாளர் சிவகுமார்

“மீண்டும் நந்தகுமார் பெங்களூருக்கு சென்று விட்டார் பின்னர் தீபாவளி சமயத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார் வந்தவர் சாலையோரங்களில் நின்று பல ஆண்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார் இதை அறிந்த நந்தகுமாரின் தாய் ஹோட்டல் கடை உரிமையாளர் இரண்டாவது குற்றவாளி வெங்கடேசனிடம் என் பையன் இதுபோல சுற்றியுள்ளது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவரை கண்டித்து வையுங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதற்கு ஏதாவது வழி செய்யுங்கள் என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் தன்னுடைய நண்பர் காமராஜரிடம் கூறியுள்ளார். அவர் தனக்கு தெரிந்த மேலும் மூன்று பேரை அழைத்து வந்துள்ளார்.”

“பின்பு அனைவரும் சேர்ந்து நந்தகுமாரின் காலை உடைத்து விட்டால் வீட்டைவிட்டு வெளியே செல்ல மாட்டான் என்ற எண்ணத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார் மீது கடந்த திங்களன்று போர்வையை போட்டு காலை உடைத்துள்ளனர் இதில் ஏற்பட்ட போராட்டத்தில் படுகாயமடைந்தார்.”

“பின்னர் யாரோ நந்தகுமாரை தாக்கி புதருக்குள் வீசி சென்றுள்ளனர் என நாடகமாடி நந்தகுமாரை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு முடியாமல் போக பின்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் இறந்துவிடுகிறார் இந்த வழக்கில் தாய் உட்பட மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்து உள்ளோம்,” என்றார் ஆய்வாளர் சிவகுமார்

அடுத்து சேலம் திருநங்கைகள் நல சங்க தலைவர் பூஜா விடம் பேசினோம்…. 1990 காலங்களில் திருநங்கைகள் மீது பெற்றோர் மிகவும் பாசமாக இருப்பார்கள் அதேபோல் திருநங்கைகளும் பெற்றோர் மீது மிகவும் பாசமாக இருப்பார்கள் ஆனால் உறவினர்களுக்கு பயந்து சமூகத்திற்கு பயந்து அவர்கள் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அப்பொழுது அவர்களுக்கு பொது அறிவு , திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு கிடையாது.

பூஜா

ஆனால் இன்றைய கால கட்டத்தில் எங்கள் சங்கங்கள் மூலம் நிறைய விழிப்புணர்வு கவுன்சிலிங் திருநங்கைகள் குறித்த குறும்படங்கள் பத்திரிகைகள் மூலம் செய்திகளில் விழிப்புணர்வு இவ்வளவு செய்து வந்தும் இப்படி ஒரு செயலை தாயே செய்திருப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாக உள்ளது இதை எப்படி எதிர்கொள்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை எப்படி கண்டனம் தெரிவிப்பது என்று எங்களுக்கு புரியவில்லை.

ராஜா காலத்தில் இருந்து திருநங்கைகள் இருக்கிறார்கள் இது வரலாற்றில் உள்ளது ஆனால் எங்கள் திருநங்கைகள் வரலாற்றில் இதுபோன்ற ஒரு செயலை பெற்ற தாயே செய்திருப்பது மிகவும் எங்களை வருத்தப்பட வைக்கிறது திருநங்கைகளாக மாறுபவர்கள் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் எங்கள் சங்கம் மூலம் நாங்கள் அவரை பாதுகாத்துக் கொள்கிறோம் தயவுசெய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றார் பூஜாதொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது ? என்ற கேள்வியோடு மனநல மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதியுடன் பேசினோம்…

மோகன் வெங்கடாசலபதி

ஆணாகப் பிறந்த சிலருக்கு டீனேஜ் வயதில் மனதில் தான் ஒரு பெண் என்ற எண்ணம் தோன்றும் அதை பாலின மாற்ற அடையாளங்கள் அதனால் ஏற்படும் மன குழப்பங்கள் என்று மனநல மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள் இந்த மாறுபாட்டினால் திடீரென ஆண்கள் மீது அதிகமாக ஈர்ப்பு ஏற்பட்டு ஆண்களுடன் பழகுவது பேசுவது என்பது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள் இது ஒரு ஹார்மோன் கோளாறு தான் இதை பார்த்தவுடன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அவர்களை அடித்து துன்புறுத்த கூட செய்வார்கள்.

இப்படி பாதிக்கப்பட்டவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் திருநங்கையாக மாற வாய்ப்புகள் உள்ளது தங்களுடைய மகன்களிடம் இதுபோல மாற்றத்தை பெற்றோர்கள் கண்டால் உடனே கோபப்படக்கூடாது உடனடியாக அவர்கள் ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும் அவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சை அளிப்பார்கள் பாதிக்கப்பட்டவரிடம் ஓரின ஈடுபாடு வருவது சகஜம் இது ஒரு நோயல்ல இப்படியே தொடர்ந்தால் நீ அறுவை சிகிச்சை செய்து கொண்டு வேறு ஒரு பாலினத்திற்கு மாறவேண்டிய வாய்ப்புகள் உள்ளது

எனவே இந்த எண்ணத்தை மாற்றிக்கொள் என்று தொடர்ந்து அறிவுரை கூறுவார்கள் அப்படி செய்யும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே எதிர் பாலினத்தின் மீது கவர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு இப்படி உளவியல் சிகிச்சை மூலம் பலர் மாறியிருக்கின்றனர் அறுவை சிகிச்சை நடக்கும் முன்பு வரை அவர்களை பழைய நிலைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது ஆகவே பெற்றோர்கள் கோபப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை மனநல சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றார்.

Previous Story

நாம் தமிழர் - திமுகவினர் மோதல்

Next Story

தேரர் அவமானம்:சந்திரிக்கா புகழாரம் !