கடும்போக்குவாத சிந்தனை கொண்ட சர்ச்சைக்குரிய நபரான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கலாம் என தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காரணம் அண்மைய நாட்களாக இலங்கை பரபரப்பில் உள்ள நிலையில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடாத அதே வேளை பொது வெளி எதிலும் ஞானசார தேரரின் பிரசன்னம் இல்லாமல் உள்ளமையே இச் சந்தேகம் ஏற்படக் காரணம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது,
தற்போது அவர் டுபாயில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது.
இந்நிலையில் அவர்களின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி வருகின்றனர்.
கடந்த காலங்களில் கோட்டபாய ராஜபக்ஷவின் நெருங்கமானவராக ஞானசார தேரர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.