ஞானசாரரிடம் இரண்டரை மணிநேர விசாரனை

பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற்பகல் 3 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த அவர் பிற்பகல் 5.30 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Story

pak vs eng t20: மெல்பர்னில் மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்?

Next Story

ஊர் சிரிக்கும் 2023 பஜெட் நாளை!