தற்போது நாடுபூராவிலும் பாடசாலைகளுக்கிடையிலான கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று கண்டி-வத்தேகம கல்வி வலயத்தின் 17 வயதுக்குட்பட்ட கரப்பந்துப் போட்டி கெங்கல்ல மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் இறுதி ஆட்டத்துக்காக கெங்கல்ல மத்திய கல்லூரியை அதன் சொந்த மைதானத்தில் ஜாமியுல் அஸ்ஹர் அணி சந்தித்தது.
அதில் ஜாமியுல் அஸ்ஹர் அணி இலகு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக கடந்த மூன்று வருடங்களாக இதே அணி வலயத்தில் சம்பியன் கிண்ணத்தை வெற்றி பெறுவது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.