இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்றைய தினம் ( 01.02.2026 ) ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகம் முன்பாக இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




