ஜனாதிபதி செயலகத்தில் வெளிவரும் புகையால் குழப்ப நிலை

ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து திடீரென புகை வெளியேறுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு புகை வெளியேறுவது மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காலி முகத்திடலில் பெருந்தொகையான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ளவர்கள் இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தரப்பில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous Story

GOTA GO HOME: போராட்ட களத்தில் இப்தார்

Next Story

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்- பேராயர்