சிறந்த ஏமாளிகளுக்கான விருது! 

-நஜீப்-

மிகச்சிறந்த ஏமாளிகள் அல்லது கோமாளிகளுக்கான ஒரு விருது உலகில் இருக்குமாக இருந்தால் அந்த விருதை இந்த வருடம் நமது நாட்டில் இருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு வழங்க வேண்டும் என்பது நமது சிபார்சாக இருக்கின்றது.

குறிப்பாக நமது சம்-சும சோடிகளுக்கு இதை வழங்கலாம். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு தீபாவளியை காலம் காட்டி தமிழர்  உரிமைகளைப் பெற்றுவிடுவோம் என்று ஐயா சம்பந்தன்-சுமந்திரன் காலக்கெடு கொடுத்திருந்தார்கள்.

அத்துடன் இந்த 2023 சுதந்திரத்துக்கு முன்னர் இனப் பிரச்சனைக்கு தீர்வு என்ற ஜனாதிபதி ரணிலின் பேச்சைக் கேட்டு அதில் நம்பிக்கை வைத்து இதே சோடிகள் ஓடித்திரிந்து மூக்குடைபட்டது. அன்றே இது நடக்கின்ற காரியம் அல்ல என்று நாம் உறுதியாக முன் கூட்டியே அடித்துச் சொல்லி இருந்தோம்.

ஆனால் பெரியவர்கள் ரணிலை இந்த முறையும் நம்பி மோசம் போய் இருக்கின்றார்கள். இது இவர்களின் தனிப்பட்ட ஏமாற்றமல்ல ஒரு சமூகத்தையே இவர்கள் ஏமாற்றவும் வைத்து வேடிக்கை பார்த்திருக்கின்றார்கள். இது இவர்களது தொழில் என்ற அளவில் இன்று இருப்பதால் இந்த விருதுக்கான அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு என்பது எமது வாதம்.

நன்றி: 02.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அரசியல் இருப்புக்கான சதிகளும் சவால்களும்

Next Story

ரணில் ஆட்சி எப்போ முடியும் !