சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லியுள்ள ஆளுநர்

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்களால் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous Story

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து

Next Story

உலகக் கோப்பை ஃபிஃபா கால்பந்து கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது