உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவு விழிப்புணர்வுக்கான குறுந் திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவற்கு தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
இதில் நடிப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்களிடத்தில் விரைவில் விண்ணப்பங்கள் கோரப்பட இருக்கின்றன.
மேலும் சமூகத்தை விழிப்படையச் செய்யக் கூடிய கதைகளும் பொது மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. இது தொடர்பான மேலதி தகவல்களை உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவினர் வெகு விரைவில் வெளியிடத் தயாராகி வருகின்றார்கள்.
இதற்கான கதைகள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அவை சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளைப் பேசுபவையாக அமைய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் இவற்றிற்கு விண்ணப்பிக்க முடியும்.