முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் கார் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (05.02.2024) வெலிசறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே சாரதியான பிரபாத் எரங்கவை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பயணித்த வாகனம், கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதி அண்மையில் விபத்துக்குள்ளானது.
இதன்போது, காயமடைந்த முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்தவும், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.