சஜித்தின் புதிய கூட்டு!

-நஜீப்- 

ஐக்கிய மக்கள் கட்சி தனது தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் நாம் இந்த குறிப்புக்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சஜித் அணி தனது வழக்கமான கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கப்பாடுகளுக்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது.

புதிதாக இவர்களுடன் வந்து இணைந்து கொண்டிருப்பவர்களுக்கு பெரிதாக வாக்கு வங்கிகள் இல்லை. என்றாலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் அடங்கி இருக்கின்றார்கள். அவர்கள் இந்தக் கூட்டணியில் தம்மை இணைத்துக் கொள்வதான் மூலம் தமது பிரதிநித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

அத்துடன் தனித்துவ சிறுபான்மைக கட்சிகளும் இந்தக் கூட்டணிக்குள் வருவது அவர்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான். என்றாலும் ரணில் அள்ளி வழங்கியது போல இந்த முறை இவர்களுக்கு வாய்ப்பு இல்லை. சஜித் கிள்ளிக் கொடுப்பதை வாங்கி வாயை மூடிக்கொண்டு இருப்பதைத் தவிர இவர்களுக்கு பெரிதாக பேரம் பேச முடியாது.

எனவேதான் ஏற்கெனவே ஒரு சிறுபான்மைத தனித்துவத் தலைவர்  கூட்டாகவும் தனித்தும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார்.

நன்றி: 07.04.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பள்ளிவாசல் நிர்வாகிகளால் முறைகேடாக வக்பு சொத்துக்கள் கையாளப்பட்டால் அறிவியுங்கள்

Next Story

மொட்டுக் கூட்டமும் குழப்பமும்!