கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய  அதிரடி படை வீரர்

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவ அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளார்.

கோட்டா பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் பெருந்திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் இணைந்த அதிரடி வீரர்

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய சிறப்பு அதிரடி படை வீரர்(Photo

இந்நிலையில் கோட்டாயவுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடி படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய்க்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கரகோஷம் செய்து இணைத்துக் கொண்டனர்.

பொலிஸ் அதிகாரியும் இணைவு

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய சிறப்பு அதிரடி படை வீரர்(Photo

ஏற்கனவே இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களுடன் இணைந்து கோட்டபாயவுக்கு எதிரான பேரணியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Previous Story

நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்!

Next Story

கோட்டாபய மாளிகைக்குள் நுழைந்த மக்கள்