-நஜீப்-
போலியான மற்றும் தரக்குறைவான மருந்து வகைகளை மக்களுக்குக் கொடுத்து அவர்களது உயிர்களை பறித்தார் என்ற குற்றச்சாட்டு முன்னாள் சுகாதர அமைச்சர் கேஹெல்லியாவுக்கு எதிராக… இல்லை அப்படி ஏதுவுமே தனது அமைச்சில் நடக்கவில்லை எனறார் அமைச்சர். பின்னர் தானல்ல தனது அதிகாரிகள்தான் அப்படிச் செய்தார்கள் என்று சொல்லி தான் தப்பிக் கொள்ள முயன்றார் அமைச்சர்.
அப்போது அமைச்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் தூய்மையானவர் என்ற தோரணiயில் அவருக்கு ஆளும் தரப்பினர் விசுவாசம் தெரிவித்தனர். பின்னர் எதிர்ப்பு வலுக்கவே அதிகாரிகள் அமைச்சர்கள் அனைவரும் இப்போது உள்ளே இருக்கின்றார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் ரணிலை சந்திக்கப் போன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கெஹெல்லியவுக்காக ஜனாதிபதி ரணிலிடம் பேசியதுடன் ஜனாதிபதி முன்னே இருந்து கொண்டு கெஹெல்லிய மகளுக்கு தொலைபேசி எடுத்து ஜனாதிபதியை தொடர்படுத்தி கோவைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு அங்கு கேட்டு இருக்கின்றார்.
அப்போ அமைச்சர் வெளியே வரப்போகின்றார் போலும்.
நன்றி: 19.05.2024 ஞாயிறு தினக்குரல்