–நஜீப்-
நமது நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் எப்படி எல்லாம் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றார்கள்-சுராண்டுகின்றார்கள் என்பதற்கு அமைச்சர் கெஹெலியவின் மின்சாரக் கட்டணம் நல்லதொரு உதாரணம். ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மின்சார சபைக்கு கெஹெலிய வைத்த ஆப்பு பற்றி பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.
அவரது மின் கட்டணம் கூட தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. அதன்படி அவர் செலுத் வேண்டிய மொத்த தொகை ஒரு கோடி 20இலட்சத்து 56ஆயிரத்து 803 ரூபாய் 38 சதம். ஒரு சாதாரண குடிமகன் இப்படி ஒரு தொகையை செலுத்தாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்.
இந்த இலட்சனத்தில்தான் ஒரு நாடு ஒரு சட்டம் என்று பேசுகின்றார்கள். மின் கட்டணத்தை தூண்டிக்க அதிகாரிகள் போன பல சந்தர்ப்பங்களில் அரசியல் அதிகாரத்தைப் பாவித்து அவர்கள் விரட்டியடிக்கப் பட்டிருக்கின்றார்கள்.
நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022