-நஜீப்-
இன்று நமது நாட்டில் கொத்துக் கொத்ததாக செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கினறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி. ஈஸ்டர் தாக்குதல் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று அன்று சொன்ன ஜனாதிபதி மைத்திரி, அப்போது தான் நாட்டில் இருக்கவில்லை என்று அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனால் அவருக்கு நூறு மில்லியன் வழங்க வேண்டும் என்றும் ஒரு தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடாத்தியவர்களை எனக்கு இப்போது தெரியும். நான் அவர்களைக் கண்டு பிடித்து விட்டேன். நீதி மன்றத்திடம்தான் அதனை செல்வேன் என்றும் அவர் சொல்லி இருந்தார்.
பொலிஸ் அவரை விசாரித்து நீதி மன்றமும் அதற்கு விளக்கம் கேட்டது. ஆனால் இப்போது அவர் நீதி மன்றத்தின் முன் ஆஜராவதை தவிர்க்கின்றார். அத்தோடு தனது கட்சி செயலாளர் தயாசிரி தனக்கு எதிராக சதி செய்கின்றார் என்று அவரைத் தூக்கினார் மைத்திரி. அண்மையில் இன்னும் பலரையும் பொறுப்புக்களில் இருந்து அவர் விரட்டினார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இப்போது அதிரடியாக அவருக்கு எதிராக நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி அதிர்ச்சி வைத்தியம் பார்த்திருக்கின்றார்.
நன்றி: 07.04.2024 ஞாயிறு தினக்குரல்