நஜீப்
நன்றி:23.08.2026 ஞாயிறு தினக்குரல்

1.வடக்கு-பலாயில் எல்ரீரீ முகாம் என்று ஊரைக் கூட்டியவர் ஒரு கேடி. அவரிடம் ஐந்து ஆள் அடையாள அட்டைகள். பொலிசில் பல குற்றச்சாட்டுக்களும் பதிவில் இருக்கின்றதாம்.!
2.ஒரு கோடி ஆறு மில்லியன் செலவில் மனைவி மைத்தரி பட்டமளிப்பு வைபவத்துக்கு பரிவாரங்களை கூட்டிப்போனது ரணிலின் தனிப்பட்ட பயணம் என்பது இன்று உறுதி.!

3.தள்ளு வண்டியில் நீதி மன்றம் வரும் கெஹெல்லியவுக்கு தற்போது பதிணைந்து வழக்குகள் நிலுவையில். வேறு மகள்மார் மகன் என்போருக்கும் பல வழக்குகள் இருக்கின்றன.!
4.பொலிஸ் மற்றும் நீதித்துறைகளில் அரசுக்கு எதிராக பல உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று பரவலான குற்றச்சாட்டு!
5.சீருடை விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக தமிழ் முஸ்லிம் தரப்பினரை ஈஸ்டர் தாக்குதல் போல பயன் படுத்துகின்றார்களா என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.!
6.ஜனாதிபதி ஆர்.பிரேமதாச பாதுகாப்புப் பிரிவில் சொத்தி உபாலி ஜனாதிபதி சந்திரிகாவின் பாதுகாப்புப் பிரிவில் பெத்தேகன சஞ்சிவ என்ற பாதாள தலைவர்களுக்கும் பதவி.!
7.போதை வியாபாரி சிரான் பாசித் கல்கிஸ்ஸ நகரசபையில் குப்பை சேகரிக்கின்ற ஊழியராக தெருவில் வேலை பார்த்திருக்கின்றார். அப்போ மனிதன் எப்படி கோடிஸ்வரரானார்.!





