–நஜீப்-
தேசப்பற்றுக் காரணமாக குடும்பத்தார் எதிர்தத் போதும் தான் துனிந்து பதவியை மீண்டும் ஏற்றதாக நிதிக்குப் பொறுப்பானவர் ஒரு முறை கூறி இருந்தார். அந்தப் பற்றைப் பார்த்த பெரியவர் இதோ நீதிக்கும் உன்னைவிட்டால் எனக்கு வேறு ஆள் கிடையாது என அதையும் தலையில் கட்டி விட்டார்.
ராஜாக்கள் சட்ட விரோ செயல்களுக்கு துனை நிற்பதால்தான் தம்பி சப்ரிக்கு இந்தப் பதவிகள் எல்லாம் என்று ஓமல்பே சேபித்த தேரர் கூறிய கதையை ஒரு நண்பர் நீதி,நிதியின் காதில் போட மனிதன் ஆடிப் போய் விட்டார்.
துடித்துப் போய் பதவியை விட்டு ஓடி இருக்கின்றார். இந்தப் பதவியை ஏற்ற போது மனிதன் நெருக்கடிக்கு ஆளாகப் போகின்றார். அவருடன் சேர்ந்து அவர் சார்ந்த சமூகத்துக்கும் ஆபத்து என்றும் நாம் எச்சரித்திருந்தோம்.
எனவே தம்பி சப்ரியின் தேசபற்று நேற்றோடு காற்றில் போய் விட்டது. இப்போது மனிதன் இருக்கின்றாறோ இல்லையோ என்றும் தெரியாது.
நன்றி: 15.05.202 ஞாயிறு தினக்குரல்