-பாசீர் சல்வா-
அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்காக பல நலன் விருப்பிகள் உதவி ஒத்தசை வழங்கி இருந்தனர். அவர்கள் அனைவரையும் பள்ளி நிருவாகம் நன்றியுடன் நினைவு கூருகின்றது.