கன்னத்தில் அறைவேன்!

-நஜீப்-

தனது கட்சியில் இருக்கின்ற சிலர் தனக்கும் கட்சிக்கும் எதிராக உளவு வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படித் தொடர்ந்து பயணிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வாறானவர்கள் கண்டறிப்படும் போது அவர்களைக் கன்னத்தில் அறைந்துதான் கட்சியில் இருந்து வெளியே போடுவேன்.!

இப்படி கட்சிக் கூட்டமொன்றில் எச்சரித்திருக்கின்றார் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜீத் பிரேமதாச. அவர் இப்படிப் பேசுவதாக இருந்தால் அவர் எந்தளவுக்கு அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். கடந்த வாரம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தலைவருக்கு எதிரான தனது கருத்துக்களை பகிரங்கமாகவே பேசி இருந்ததை நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

கட்சியில் இருக்கின்ற சில உளவாளிகள் நிமல் லன்சாவுடன் நெருக்கமாக செயலாற்றிக் கொண்டிருப்பதாகவும் சஜித் அந்தக் கூட்டத்தில் பகிரங்கப்படுத்தி இருக்கின்றார். தலைவர் சஜித் இப்படிக் கொதித்துப் போய் கர்ச்சிக்கின்ற போது, அங்கிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனித்திருக்கின்றார்கள்.

நன்றி: 22.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காஸாவுக்குள் நுழைய  இஸ்ரேல் தயக்கம்!

Next Story

 கடும் நிபந்தணையின் கீழ் இந்திக்கவுக்கு பிணை